Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



அன்பு நண்பர்களே,

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றார் பாரதியார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.

உண்மையையே என்றும் பேசி தனது வாழ்வை சத்திய சோதனையாக வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் மஹாத்மா என்று அகில உலகிலுள்ளோரும் போற்றப் பட்டார்.

அரிச்சந்திரன் சத்திய நெறியைக் கடைபிடித்ததால் பிறவியில்லாப் பெருநிலை பெற்றான் என்று சொன்னார் திருமுருக கிருபானந்த வாரியார்.

உண்மையில் தெய்வம் உறைவதால் உண்மையையே என்றும் பேசும் ஒருவருக்கு வாக்குப் பலிதம் ஏற்படும், அதாவது அவர் நடக்கும் என்று சொல்வது அனைத்தும் உண்மையாக நடக்கும்.

ஆனால் உண்மையைப் பேச பாமர மக்கள் அஞ்சுகிறார்கள். இதனாலேயே உலகில் நீதி நிலைபெறாமல் மக்கள் பலரும் அல்லலுறுகின்றனர்.

இந்நிலையை விளக்கும் பாடல்:

கேட்டு மகிழ: உள்ளம் என்பது ஆமை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை




Designed and maintained by AKR Consultants