- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்
என்றொரு புலவர் பாட அதனை
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்
என்று மாற்றியமைத்தாராம் ஔவையார்.
ஒன்றே முக்கால் அடியில் உலகினர் அனைவரும் ஒப்புக்கொண்டு கடைபிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில் எடுத்தியம்பும் திருக்குறளுக்கொப்பானதோர் நூல் உலகெங்கும் தேடினாலும் கிடைத்தற்கரிது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. "வானமளந்த தனைத்து மளந்திடும் வளர்மொழி வாழியவே' என்று தமிழ் மொழியை அமரகவி பாரதி புகழ்ந்தேத்த முக்கியக் காரணமான நூல்களுள் முன்னணியில் இருப்பது திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
அத்தகைய திருக்குறளைப் பற்றி ஆண் குரலுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் T.M. சௌந்தரராஜன் பாடிய பாடலைக் கேட்போமா?
கேட்டு மகிழ: அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
திரைப்படம்: அறிவாளி
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
உலகுக்கு ஒளிபோலே உலகுக்கு ஒளிபோலே
உடலுக்கு உயிர்போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
ஆ..ஆ......
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குற
