Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



அன்பு நண்பர்களே,

இவ்வுலகில் எல்லோருடைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதிய வளங்கள் நிறைந்திருந்தும் பலர் உயிர் வாழவே திண்டாடும் நிலை நிலவுகிறது. கண்கவரும் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டித்தரும் கட்டடத் தொழிலாளி தெருவோரக் குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வசிக்க வேண்டியுள்ளது. அனைத்து மக்களும் அணிந்து மகிழ வண்ண வண்ண ஆடைகளை அனுதினமும் நெய்துதரும் நெசவுத் தொழிலாளி தான் உடுக்கக் கந்தையே கிடைக்கின்றது.

காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து இன்பமாய் வாழக் கனவு காணும் மங்கையரின் ஆசை நிராசையாகி மனதுக்குப் பிடிக்காத கணவருடன் வாழும் துர்பாக்கிய நிலை வந்தெய்துகிறது.

இன்னும் இவைபோல எத்தனையோ துன்பங்களை அன்றாடம் அனுபவித்து வாழ்வை நடைபிணங்களாக வாழ்பவர் பலர். இத்தகைய இழிநிலைக்குக் காரணம் என்ன?

இக்கேள்விக்கு விடை தருகிறது இப்பாடல்:

கேட்டு மகிழ: ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க

படம்: வண்ணக்கிளி
இயற்றியவர்: மருதகாசி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆ......ஆ...ஆஅ... ஓ..ஓ..
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
காத்திருக்கும் அத்தை மகன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
கண்ணம்மா.. சொல்லம்மா.. கண்ணம்மா சொல்லம்மா
(நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே)




Designed and maintained by AKR Consultants