- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்றார்கள் தமிழறிஞர்கள். அவ்வாறிருக்க அவரது மகன் அம்பிகாபதி எனில் கேட்க வேண்டுமா? ஒரு முறை வயல் வெளியில் உலாவச் சென்ற கம்பர் அங்கொரு ஏற்றமிறைப்பவன் இசையுடன், "மூங்கிலிலை மேலே" எனும் இரு வார்த்தைகளை மட்டுமே நெடுநேரம் திரும்பத் திரும்பப் பாடுவதைக் கேட்டார். அவன் அடுத்து வேறு வார்த்தைகளைப் பாடவே இல்லை. வீடு வந்ததும் அம்பிகாபதியிடம் இதைக் கூறியதும் அவன் உடனே, "தூங்கு பனி நீரே" என்று அடுத்த வார்த்தைகளைச் சொல்லவே, "ஏத்தக்காரன் பாட்டுக்கெதிர் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று அகமிக மகிழ்ந்தார்.
http://www.nilacharal.com/tamil/specials/tamil_kadhal_195.html
அம்பிகாபதியின் தமிழ்ப் புலமை கண்டு அவன் மேல் காதல் கொண்டாள் அமராவதி. அவளும் தமிழில் புலமை உடையவளே. அவளது அன்பும் அறிவும் கண்டு அம்பிகாபதியும் அவள் மேல் தீராத காதல் கொண்டான்.
காவியமாகிய அக்காதலர்கள் இணைந்து பாடுவதாக அமைந்த பாடல்:
படம்: அம்பிகாபதி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. பானுமதி
இசை: ஜி. ராமநாதன்
வாடா மலரே தமிழ்த் தேனே வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
வாடா மலரே தமிழ்த் தேனே
ஆராவமுதே எனதன்பே ஆராவமுதே எனதன்பே
எனை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெருந்தேரே
தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெருந்தேரே
தவிக்குமோ என்னுயிர் உனைப் பிரிந்தால்
தவிக்குமோ என்னுயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும் திசை நாலும் மாறினும்
நாம் என்னாளும் பிரியோம்
வானும் கடலும் திசை நாலும் மாறினும்
நாம் என்னாளும் பிரியோம்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
என்றும் ஆராவமுதே எனதன்பே
எனை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே

