- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
பருவக் குமரியாயினும் குழந்தை உள்ளம் படைத்த பெண்ணவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு செல்வந்தனின் அடக்குமுறை காரணமாக அவனது ஆளுமையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் எளிதில் உறக்கம் வராமல் தவித்தாள். அவளது அழகையும் குழந்தை மனதையும் ஆராதிக்கும் இளைஞன் ஒருவன் அவளது மனம் குளிரப் பாடுகிறான்.
ஊஞ்சலில் அமர்ந்து ஆடியவாறு அவனது பாடலைக் கேட்டு மகிழும் அப்பெண் சற்று நேரம் கழித்து அவனது இசையின் மகிமையால் தன்னை மறந்து, தன் துன்பங்களையும் மறந்து அமைதியான உறக்கத்தில் ஆழ்கிறாள்.
இனிமையான இந்தப் பாடல் அவளை மட்டுமல்ல, கேட்கும் யாரையும் அமைதிப் படுத்தி உறங்க வைக்க வல்லது.
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/kizhakku-vas...
கிழக்கு வாசல் 1990
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவே வான் நிலவே நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோலே முத்து மணி மாலே
மொத்தத்தில தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

