Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மானுடர் மனதைக் கரைய வைக்க வல்லது இசை. இயற்கையை வசப்படுத்தி இறையருளைப் பெற்றுத் தரவல்லது இசை.

குழலிசையும் யாழிசையும் தம் மக்கள் மழலைச் சொல்லுக்கு ஈடாகாது என்று கூறினாலும் குழலும் யாழும் இனியவை எனும் கருத்துக்கு வள்ளுவர் மறுப்பேதும் சொல்லவில்லை.

இசை துன்பத்தை மறக்கடித்து இன்பம் சேர்க்க வல்லது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதிலும் தன் மனம் கவர்ந்த எழில் மங்கையொருத்தி யாழ் மீட்டிப் பாடினால் அதனைக் கேட்கும் அந்த ஆண் மகனுக்கு உற்ற துன்பம் எதுவாகினும் அத்துன்பம் நொடியில் பறந்து விடுமன்றோ?

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

படம்: ஓர் இரவு
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்
இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?








Designed and maintained by AKR Consultants