Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



சிந்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரோடும் ஏசுவும் புனிதராம் காந்தியும் எழுதி வைத்த எத்தனையோ உண்மைகளில் முக்கியமானது மனக்கட்டுப்பாடு. ஒருவன் கவலைகள் நீங்கி அமைதி பெற வேண்டுமெனில் முதலில் தன் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அது வாழ்வின் சுவைகளை அனுபவித்து அறிந்து தெளிந்தவர்க்கே.

ஆசை என்னும் பாசக் கயிறால் கடையப்படும் மத்தாகும் மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக காதல் கொண்ட பெண்ணின் மனம் மிகவும் பொல்லாதது. என்ன அறிவுரை சொன்னாலும் கேளாது காதலில் மூழ்கி அல்லல்படும், தன் காதலனைத் தேடி அலையும். காதலனைக் காணாவிடில் வாடித் துயருரும். காதலனைக் கண்டவிடத்தே துள்ளி ஆடும். காதல் உண்ர்வைப் போல் ஒரு பருவமடைந்த பெண்ணின் மனதை மயக்கி வாழ்வில் இன்பம் தர வல்லது வேறில்லை. தன் மனதைக் கொள்ளை கொண்ட காதலன் கள்ளம் கபடற்ற நல்ல உள்ளம் கொண்டவனாக அமையப் பெற்ற பெண் பெரும் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது. சுவைத்தாலன்றிப் புரியாதது.

அவ்வாறு காதல் வயப்பட்ட ஒரு பெண் கொஞ்சு மொழியில் பாடும் மனதை மயங்க வைக்கும் பாடல்: காளை வயசு கட்டான சைசு

படம்: தெய்வப் பிறவி
பாடியவர்: கே. ஜமுனாராணி

அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ
ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
காதல் ஒரு தினுசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது








Designed and maintained by AKR Consultants