Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



கின்னஸ் சாதனை புரிந்து சிகரம் தொட்டபின்னர் வெகுகாலம் தொடர்ந்து சிகரமாகவே வாழ்ந்து வரும் இசைகோர் மாமேதை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் முதன்முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் புரட்சி நடிகர் மற்றும் மக்கள் திலகம் என்று அறியப்பட்டுப் பின்னர் புரட்சித்தலைவராக உயர்ந்தவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும், முன்னாள் முதல்வர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்து 1969ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைப் பெண் படத்தின் மூலமே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொலைக்காட்சிக்கு திரு எஸ்.பி. பாலசசுப்பிரமணியம் அளித்த பேட்டியில் இவ்வனுபவத்தைக் குறிப்பிடுகையில், பாடல் ஒலிப்பதிவு செய்யக் குறித்த நாளில் தனக்கு ஜூரம் வந்து பாட இயலாத நிலையில் இருந்ததாகவும், இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். தனக்காகப் பாடல் ஒலிப்பதிவு நாளைத் தள்ளி வைத்ததைக் கூறினார். தனக்காக ஒலிப் பதிவையே தள்ளி வைக்க வேண்டுமா எனத் தான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்டதற்கு எம்.ஜி.ஆர். கூறினாராம், "நீ எனக்காகப் பாடுவதாக உனது நண்பர்கள் அனைவரிடமும் கூறியிருப்பாய். இந்நிலையில் உனக்கென அளிக்கப் பட்ட வாய்ப்பைப் பறித்தால் நீ மிகவும் ஏமாற்றம் அடைவாய், அதனை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என்று பெருந்தன்மையோடு கூறியதை நினைவுகூர்ந்தார்.

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

படம்: அடிமைப் பெண்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants