Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



ஆகாரம் அரை, நித்திரை கால், மைதுனம் வீசம், பயம் பூஜ்யம் என்று ஆரோக்ய வாழ்வுக்கான சூத்திரத்தை வடலூர் ராமலிங்க வள்ளலார் வகுத்துத் தந்துள்ளார். இதன்படி அரை வயிற்றுக்கே ஆகாரம் இட வேண்டும், அரை வயிறு அளவை எவ்வாறு கண்பதெனில் உணவுண்கையில் பசியடங்கிய நிலையில் இன்னும் கொஞ்சம் உண்ணலாம் எனும் எண்ணம் இருக்கையிலேயே உணவருந்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நித்திரை கால் என்றால் ஒரு நாளில் 6 மணி நேரமே உறங்கலாம் என்பதாகும், மைதுனம் வீசம் என்பது 16 நாட்களில் ஒரு முறையே உடல் சுகம் பெறலாம், பயம் அறவே கூடாது.

அதிக நேரம் உறங்குபவர் உற்சாகக் குறைவுடனேயே காணப்படுவர். அதிலும் குறிப்பாகப் பணி செய்யும் நேரத்தில் உறங்கும் பழக்கமுள்ளவர் ஒரு சோம்பேரியாகவே திகழ்வதுண்டு. ஒருவர் இன்னொருவரிடம் சொன்னாராம், " 4 நாட்களாக சரியாகத் தூங்கவில்லை' என. மற்றவர் ஏன் எனக்கேட்க இவர், "4 நாட்களாக அலுவலகம் விடுமுறை" என்றாராம்.

இத்தூக்கம் உடல் ரீதியானது. இதைத் தவிர மனரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பலர் உறங்குவதாலேயே உலகில் அவர் மட்டுமின்றி அவரை நம்பியிருப்பவர்களும் ஏனையோரும் அவதிப்படுகின்ற கொடுமை அன்றாடம் நிகழும் ஒன்றாகும்.

நாட்டில் நீதித்துறை, காவல் துறை, அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகள் இத்தகைய உறக்க நிலையில் இருப்பதாலேயே நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி முதலான குற்றங்கள் மலிகின்றன, குற்றவாளிகள் தைரியமாகத் தங்கள் முறைகேடான தொழில்களை சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தொடர்ந்து செய்கின்றனர். நம் நாட்டிற்குள் அயல் நாட்டுத் தீவிரவாதிகள் நுழைந்து அழிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய தீமைகள் நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுமெனில் அனைவரும் பணி நேரத்தில் விழித்திருப்பது மட்டுமின்றி விழிப்புடன் செயல்படவும் வேண்டும்.

தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே

திரைப்படம்: நாடோடி மன்னன்
ஆண்டு: 1958
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
திரைக்கதை வசனம்: கவிஞர் கண்ணதாசன்

தம்பீ, தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants