Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



பொதுவான செயல்பாடுகளில் பொறுமையைக் கடைபிடிக்கும் ஆண்கள் காதல் விஷயத்தில் பெரும்பாலும் அவசரக்காரர்களாக இருக்கிறார்கள். தன் மனம் கவர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தன் காதலை வெளியிட்டதும் உடனே அவள் தானும் அவனைக் காதலிப்பதாகக் கூற வேண்டுமென எதிர்பார்ப்பது ஒரு ஆணின் இயல்பு. இதற்கு நேர்மாறாக, பொதுவான செயல்பாடுகளில் அவசரத்தைக் காட்டும் பெண்கள் காதல் விவகாரம் என வந்துவிட்டால் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பது அவர்களது இயல்பு. இதற்குக் காரணம் இயற்கையாகவே பெண்களிடமுள்ள நாணம், அவர்கள் உள்ளத்தில் உண்மையிலேயே காதல் உணர்வு எழுந்தாலும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் தன்மையைத் தருவதாகும்.

இயல்பாக நாண உணர்வு அதிகம் இல்லாதிருந்தபோதிலும், தன்னிடம் காதலைச் சொன்ன ஆணின் மனதை அலைபாய வைத்து வாட்டுதல் சில பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு. எங்கே அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று எண்ணி தன்மேல் காதல் கொண்ட ஆண்கள் தவிக்கும் தவிப்பைக் கண்டு அளவிலா சந்தோஷமடைவார்கள் இத்தகைய பெண்கள்.

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
ஆண்டு 1999

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants