- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
காதல் கடிதம் எவ்வாறிருக்க வேண்டுமெனில், அதனை அப்பெண் படிக்கப் படிக்க அவள் உள்ளத்திலும் தன் மேல் காதல் உணர்வு தோன்றுமளவுக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். காதல் கடிதத்தில் எத்தகைய விஷயங்களை எவ்வாறு எழுத வேண்டுமெனில், அவள் மேல் தான் கொண்ட நேசத்தையும் அவளுக்குத் தனது உள்ளத்தில் தந்துள்ள உயர்வான இடத்தையும் தெளிவாக எடுத்துக் கூறி அவளுக்குத் தனது தூய்மையான நேசம் மிக்க மனத்தின் தன்மையையும் அவள் மேல் தான் கொண்ட காதலின் ஆழத்தையும் விளங்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
படம்: பேசும் தெய்வம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1967
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..
ஆகிரா

