Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம் முன்னோர்கள் பண்டைக்காலம் தொட்டே கூறிவரும் தத்துவத்தை மெய்ப்பித்தது புகழ்பெற்ற விஞ்ஞானி கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு (theory of relativity) .எனும் தத்துவம்.

ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், "நாம் பார்ப்பவையெல்லாம் நிஜமல்ல" எனும் ரீதியில் தான் கண்டறிந்த தத்துவத்தை விளக்குகையில் அவ்விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் அவரிடம், "தங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள இயலாது. நான் தற்போது தங்களைப் பார்க்கிறேன், தாங்கள் நிஜமில்லையா?" என்று கேட்டானாம். ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, "அந்த நட்சத்திரம் தெரிகிறதா?" என்று கேட்க அவன், "ஆம்" என்று பதிலிறுத்தானாம். பதிலாக ஐன்ஸ்டீன், "அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டது. நீ தற்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளீயிட்ட ஒளியே என்று கூறி அந்த உண்மையை விளக்கவே இளைஞன் மலைத்துப் போனானாம்.

அவ்வாறெனில், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் ஆறும் சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் ஜீவராசிகள் அனைத்துப் பொய்யா? உண்மை எது பொய் எது என்று உண்மையிலேயே விளங்கவில்லை.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

படம்: பாரதி
இயற்றியவர்: பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
ஆண்டி: 2000

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants