Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



அழகு மிளிரும் உலகினை நாம் கண்குளிரக் காண்பதற்கு சூரிய வெளிச்சமும் சந்திரனின் ஒளியும் உதவுகின்றன. சூரியன் அதிகாலையில் கீழ் வானத்தில் உதிக்கும் பொழுதும் அந்தியில் மேற்கே மறையும் பொழுதும் விண்ணில் மேகங்களுடனும், பூமியின் பல்வேறு பகுதிகளுடனும் சூரியனின் கிரணங்கள் கலந்து காட்டும் பல விதமான எண்ணிறந்த வர்ண ஜாலங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்.

சூரியனின் உதயமும் அஸ்தமனமும் குறிப்பாகக் கன்னியாகுமரியில் மிக அற்புதமான காட்சிகளாகும். அத்துடன் ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் ஒரே நேரத்தில் சூரியன் மேற்குக் கடலில் மறைகையில் கிழக்குக் கடலில் சந்திரன் மேலெழும் காட்சி மிகவும் அற்புதமானது,

ஒவ்வொரு ஆண்டிலும் தினந்தோறும் சூரியன் காலையில் உதிக்கும் நேரமும் மாலையில் மறையும் நேரமும் நாமறிவோம் ஆனால் சந்திரன் உதிக்கும் நேரத்தை அறிவோமாவெனில் இல்லையென்றே கூற வேண்டும். சந்திரன் பொதுவாக இரவில் வானத்தில் நம் கண்களுக்குப் புலப்பட்டாலும் பல நாட்களில் பகல் பொழுதிலேயே தோன்றி விடுவதும் கண்கூடு. ஆனால் சந்திரன் எப்போது தோன்றினாலும் அதன் அழகை அனைவரும் வியந்து ரசிக்கிறோம்.

சந்திரனின் நடமாட்டத்ததைக் கணிக்க இயலாதது போல் பெண்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அவர்களது செயல்பாடுகளையும் கணிக்க இயலாத நிலை இருப்பதாலேயே பெண்ணை சந்திரனுடன் ஒப்பிடுகின்றரோ கவிஞர்கள்? இதோ ஒரு கவிஞர் ஒரு பெண்ணை சந்திரனின் உதயத்துக்கு ஒப்பிடுகிறார்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/chandrothayam/chandrothayam.php

படம் : சந்திரோதயம்
குரல் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்: வாலி
ஆண்டு: 1966

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ? என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ? நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ? என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ? சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ? இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ? முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants