- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
மரணம் என்பது உடலுக்கு இயற்கையாக உரிய காலத்தில் கிடைக்கும் கதியாகும். அது என்றாகிலும் ஒரு நாள் நடந்தே தீரும். அதை மாற்றுவது மார்க்கண்டேயன் தவிர யாருக்கும் இயலாது.
இவ்வுலகில் நாம் வாழ்கையில் நமது கடமைகளைச் சீராக நிறைவேற்ற நமக்கு சக்தி தேவை. அத்தகைய சக்தியை நாம் இறையருளைக் கொண்டே பெற முடியும். இதற்குப் பிரார்த்தனை மிகவும் முக்கியமான சாதனமாகும். இறை சக்தியை மனதாரத் தொழுது வேண்டுவோர்க்கு சக்தி கிடைக்கும்.
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/baba/sakthi-kodu.php
படம்: பாபா
இயற்றியவர்: வைரமுத்து
இசை; ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்துவிட சக்தி கொடு சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
வெள்ளதில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்குப் பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
எரி மலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து யேமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்துவிட
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு
ஆகிரா

