Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



காதல் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதில் இயல்பாக ஏற்படும் உணர்வு. ஆணும் பெண்ணும் சேர்வதாலேயே உயிர் வாழ்க்கை உலகில் நிலைபெறுகிறது. காதல் செய்வோர் உணர்ச்சிவசப் பட்டுத் தவறு செய்வதால் பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே காதல் கொள்வோர் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புகையில் அத்தகைய விருப்பம் வாழ்நாளில் கணவன் மனைவியாக ஒருங்கிணைந்து மனமொப்பி வாழ வகை செய்தாலே அது காதல் எனக் கொள்ளலாகும்.

வெறும் பாலுணர்ச்சி மேலீட்டால் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு என்றும் காதலாவதில்லை. தாம் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியம் என்றும் அதனால் நல்வாழ்வுக்கு வழி பிறக்கும் என்றும் எல்லா வித்த்திலும் ஆராய்ந்தறிந்த பின்னரே காதலை வெளிப்படுத்தலாம். அவ்வாறன்றி உருவத்தைப் பார்த்து ஏற்படும் மயக்கத்தைக் காதல் என்றெண்ணிப் பிதற்றுதல் பயன் தராது.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு தமக்குத் தகுந்த துணை என்று நன்கு அறிந்து தேர்ந்து காதல் கொண்ட பின்னர் திருமணம் வரை உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் சமுதாயத்தில் தமக்குரிய மதிப்பைக் காக்கு்ம் விதமாக ஒருவரையொருவர் தொட்டுப் பழகாமல் தூர நின்றே பழகுவது காதலுக்கு மரியாதை தரும். வாழ்வு சிறக்க வழிகோலும்.

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

திரைப்படம்: குமுதம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி
ஆண்டு: 1962

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா?
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? ம்ம்
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?

ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஒண்ணாகி ஆஹா
ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா? இதை
உணராமே ஆம்பளைங்க துடிக்கலாமா

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
போடுகின்ற உங்களது கண்ணாலே
நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
போடுகின்ற உங்களது கண்ணாலே
ஜாடை காட்டி ம்ம் ஆசை மூட்டி ம்ம்
ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா? உள்ள
நிலையறிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
கைவிட்டு ஒம்பது மமேல் ஆசை வச்சு
கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
கைவிட்டு ஒம்பது மமேல் ஆசை வச்சு
வண்டாக ஆஹா
வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பிளைங்க
கொண்டாட்டம் போடுவதப் பாத்ததில்லையா? பெண்கள்
திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுறது எல்லாமே உண்மை தான்
கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான்

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்
கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் பிறகு
கல்யாணம் ஆகிவிட்டா ஏது தடை ஏது தடை

மாமா மாமா மாமா ஆமா மாமா மாமா மாமா
ஆமா ஆமா ஆமா போடு ஆமா ஆமா ஆமா

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants