- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
வேலை கிடைத்து, இராப் பகலாக உழைத்துப் பொருளீட்டி, திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, அவர்களுக்காகவென மேலும் மேலும் பொருளீட்டும் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவென்று பாடுபட்டு, இவ்வாறாக வாழ்வில் பெரும்பகுதியைக் கவலையிலேயே செலவிடும் மனிதன் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டு பணம் எனும் காகிதத்தை எண்ணி எண்ணிச் சேர்ப்பதில் பொழுதை வீணடிக்கிறான்.
தன் தேவைக்கேற்ற அளவு மட்டுமே பொருளீட்டி, மிகுந்த நேரத்தை மகிழ்ச்சியாக வாழ்வதற்கென செலவிட்டு, உலகின் பல இடங்களுக்கும் சென்று, இயற்கைக் காட்சிகளையும் பிற மக்களையும் கண்டு, அவ்வபபோது தனது ஆத்ம நண்பர்களுடன் கூடி மகிழ்ந்து உறவாடி, தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரவல்ல செயல்களையே பெரும்பாலும் செய்து, வாழ்வாங்கு வாழ்பவன் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கிறான். இவ்வுலகு அனைத்தையும் தனதாக ஆத்மார்த்தமாக உணரும் அவன் அழியும் பொருட்களான, பணம், வீடு, நிலம் முதலியவற்றை அடைவதில் இன்பம் காண்பதில்லை, மாறாக, அழியாப் பொருளாகிய ஞானத்தைத் தேடி அடைகிறான். முக்தி பெறுகிறான்.
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
படம்: பாசம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
ஆகிரா

