Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மனிதன் உறக்கத்தில் மாத்திரமல்லாது விழித்திருக்கையிலும் கனவு காண்கிறான். இதைப் பகல் கனவு என்போம். தினமும் கூலி வேலை கிடைப்பதே கிள்ளுக்கீரையாக இருந்து சோற்றுக்குத் திண்டாடும் ஏழை தான் கார், பங்களா என்று பெரும் செல்வந்தனாக வாழக் கனவு காண்கிறான். உண்மையாகவே செல்வச் செழிப்போடு வாழும் செல்வந்தன் உலகின் முதல் செல்வந்தனாக வேண்டிக் கனவு காண்கிறான்.

இப்பிறவிக்குத் தான் எங்கிருந்து வந்தோமென்பதும் இப்பிறவியின் முடிவில் எங்கே செல்கிறோம் என்றும் எண்ணிப் பார்க்காது இடையிடையே வந்து போகும் பகட்டான வாழ்வை நிலையென எண்ணி, அதனை அடையப் பொய் கூறிப் பிறரை ஏமாற்றவும் மனிதன் தயங்குவதில்லை.நிலையற்ற செல்வத்தில் மனதைச் செலுத்தி நிலையான செல்வமான இறைவனை மறந்து, மயக்க்த்தில் வாழ்ந்து மயக்கத்திலேயே மடிகிறான் மனிதன். என்னே பேதமை?

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
அற்பப் பணப் பேய் பிடித்தே - அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
அற்பப் பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்

நாவால் பொய் மொழிவார் - பொருள் விரும்பி
நாவால் பொய் மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் - அந்தோ
நாவால் பொய் மொழிவார் - உன்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்

அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
திருவருள் புரியாயோ
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
திருவருள் புரியாயோ

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants