Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



உறவுகள் வளர் அன்பு மலர வேண்டும். அன்பு மலரக் கனிவு பிறக்க வேண்டும். கனிவின் பிறப்பிடம் எதுவோ? சற்றும் தயங்காமல் கூறலாம் தாயென்று. தாயை விடவும் மேலான கனிவுடன் அருள்புரிபவன் இறைவன் என்று அடியார்கள் குறிப்பிடுகின்றனர்.

பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கு உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சுரந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார்.

இறைவனை நாம் காண்கிறோமோ இல்லையோ? உணர்கிறோமோ இல்லையோ? ஆனால் தாயினைக் கணந்தோறும் காண்கிறோம், உணர்கிறோம் ஒவ்வொரு பெண்ணிடத்திலும். தாயாக விளங்குவது பெண்மையல்லவா? அப்பெண்மைக்கு அணிகலன் கனிவல்லவா?

ஒரு பெண்ணின் மேல் ஒருவருக்கு உண்மையான காதல் அரும்ப அவள் கனிந்த மனம் கொண்டவளாக இருத்தல் அவசியம். கனிவு கொண்ட பெண்ணிடம் காதல் கொண்டால்...........

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்

படம்: இது சத்தியம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
ஆஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹஹாஹாஹாஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்

பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்
பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஅ

வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள் ஆஆஆ....
வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள்
தென்னம் பாளை போல சிரித்தாள் சின்னக் கண்ணில் என்னை அழைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?

அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?

வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள் கன்னி தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants