- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
ஒரு அரசனின் மகள் ஒரு சாதாரணக் குடிமகனையோ அல்லது அரசாங்கத்தில் பணிசெய்யும் ஒரு வீரனையோ காதலிப்பது இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலைமையையே உருவாக்கியதை வரலாறுகள் சொல்கின்றன.
இவ்வரலாறுகளை நன்கு அறிந்த போதிலும் காதலர்கள் காதலிப்பதை விட்டுவிட்டனரா எனில் இல்லை என்பதே உண்மை. எவ்வாறாயினும் இந்தக் காதல் படுத்தும் பாடு சொல்லி மாளாது. காதல் வியாதி தொற்றிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் போலவே தோன்றுகிறது.
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?
வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ?
வேதம் நிலையன்றோ காதல் நிலையன்றோ?
ஏழையென்றாலும் ராஜகுமாரன் ராஜாமகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ?
வானத்தின் மீதே பற்ந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலருண்டு
மன்னவன் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர்போல் மறையாதோ
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?
பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே
ஆகிரா

