Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



பிரபல தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியுமான திருமதி எஸ். வரலக்ஷ்மி தனது 84ஆவது வயதில் நேற்று சென்னையில் ஒரு மருத்துவமனையில் காலமானார் எனும் செய்தி கேட்டு பெற்ற தாய்க்கு இணையான ஒருவரைப் பிரிந்த உணர்வு எழுகிறது. தேனூறும் குரல் கொண்ட தாயாக விளங்கிய அவரது பாடல்கள் அமுத கானங்களாகும். வீரபாண்டியக் கட்டபொம்மன், கந்தன் கருணை, பூவா தலையா?, பணமா பாசமா? மாட்டுக்கார வேலன், நீதிக்குத் தலை வணங்கு உட்படப் பல தமிழ்த் திரைப்படங்களில் தனது அபார நடிப்புத் திறமையால் தமிழ்த் திரையுலக ரசிகர்களது மனதைக் கொள்ளை கொண்ட அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரியும் சூரபத்மன் எனும் கொடிய அரக்கன் சிவனது சக்தியைத் தவிர வேறு யாதொரு சக்தியாலும் தனக்கு மரணம் இல்லையெனும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பின்னர் ஆணவத்தால் மதி மயங்கி, தேவேந்திரன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறன். தேவேந்திரனின் மனைவியான இந்திராணி சூரபன்மனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்று சிவபெருமானின் கருணையை வேண்டிப் பாடுகிறாள்.

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants