Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மாலையில் மன்மதனின் மலர்க்கணைகளின் தாக்கத்தால் மயக்கமுற்று, இரவின் வருகைக்காக ஏங்கி, இரவிலே காதல் கதைகள் பேசி மயக்கம் தீர்ந்து, உறங்கி விழிக்கவும், கடமை வந்து கதவைத் தட்டுகையில் மனதில் சற்றுத் தடுமாற்றம். வாழ்வின் இன்னல்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் நேரம் வந்துவிட்டதே!

உலகம் எனும் போர்க்களத்தில் கடமை எனும் போர் புரியத் துணிவெனும் ஆயுதம் கொண்டு புறப்படுகையில், மனம் சாந்தியடைந்து நம்பிக்கையில் நிரம்ப இறைவனருளை வேண்டிப் பெறும் தருணம் வந்து விட்டது. இறைவன் உறைவது இசையிலல்லவோ?

கடமைகளை ஆற்றத் தேவையான சக்தியைத் தந்தருளி, வெற்றிக்கு வழி வகுக்க வேண்டி, உள்ளம் உருகிப் பாடித் துதித்தால் கருணை மழை பொழிந்து, சகல பயங்களையும் நீக்கி அருளும் கலியுகக் கடவுள் கந்தனேயன்றோ?

முருகா என்றதும் உருகாதா மனம்

படம்: அதிசயத் திருடன்
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி, கே பிரசாத் ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே ஏ..ஏ... ஏ...
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants