Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



கணவன் மனைவி உறவென்பது இருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கு ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையே அடிப்படை. அத்துடன் ஒருமித்த கருத்தும் உண்மை அன்பும் கொண்டு விளங்கினால் குடும்பமே கோவிலாகும். இடையே சந்தேகமெனும் சாத்தான் உள்ளே நுழைந்தால் நம்பிக்கை எனும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு உறவு முறிந்து விடும், வாழ்க்கையே நரகமாகி விடும். இத்தகைய சந்தேகத்தைப் பிறர் மனதில் விதைப்பதையே நோக்கமாகக் கொண்டு பிறரை ஏமாற்றிப் பிழைப்போர் பலர் இவ்வுலகில் உளர்.

அத்தகைய விஷமிகளை அடையாளம் கண்டு, வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். எதனையும் சந்தேகக் கண் கொண்டு பாராமல் தெளிந்த அறிவுடன் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும். காமாலைக் காரன் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் உண்மை விளங்காது.

"சம்சயாத்மா வினச்யதி" அதாவது, ஐயமுற்றோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான் என்று இறை பக்திக்காகச் சொல்லப் படும் வாக்கியமே குடும்ப உறவுக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில் அல்லவா?

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/deiva-piravi/thannai-thaane.php

படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants