- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
அத்தகைய விஷமிகளை அடையாளம் கண்டு, வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். எதனையும் சந்தேகக் கண் கொண்டு பாராமல் தெளிந்த அறிவுடன் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும். காமாலைக் காரன் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் உண்மை விளங்காது.
"சம்சயாத்மா வினச்யதி" அதாவது, ஐயமுற்றோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான் என்று இறை பக்திக்காகச் சொல்லப் படும் வாக்கியமே குடும்ப உறவுக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில் அல்லவா?
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/deiva-piravi/thannai-thaane.php
படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்
தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
ஆகிரா

