Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



மனிதன் உயிர் வாழத் துணைபுரியும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் அவனது உள்ளமும் வளமாய் வாழ உறுதுணையாய் விளங்குவது இல்லம். இல்லம் சிறக்க சிறந்த இல்லத்தரசி வேண்டும். அவள் கணவனது மனதறிந்து அவனது அனைதது முயற்சிகளுக்கும் துணை புரிவதுடன் சந்ததி விளங்கத் தேவையான புத்திர சந்தானத்தைப் பெற்றுத் தந்து அவ்வாறு பெற்ற மக்களை சான்றோர்களாக வளர்க்கவும் கணவனுக்கு உதவி புரிவது அவசியம்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டன்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

என்று இரண்டடிகளில் வள்ளுவர் இத்னை விளக்குகிறார். அவ்வாறு தனக்காகவே வாழ்ந்து, தனது வாரிசுகளை ஈன்று, தன்னுடன் அவர்களையும் காப்பாற்றவென்றே வாழும் தன் மனைவியை ஒருவன் கண்ணெனப் போற்றி வாழ வேண்டும். அவளை விடுத்து பிற பெண்களை மனதாலும் தீண்டத் தகாது.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

என்று மஹாகவி பாரதியார் இதனை விளக்குகிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants