- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டன்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
என்று இரண்டடிகளில் வள்ளுவர் இத்னை விளக்குகிறார். அவ்வாறு தனக்காகவே வாழ்ந்து, தனது வாரிசுகளை ஈன்று, தன்னுடன் அவர்களையும் காப்பாற்றவென்றே வாழும் தன் மனைவியை ஒருவன் கண்ணெனப் போற்றி வாழ வேண்டும். அவளை விடுத்து பிற பெண்களை மனதாலும் தீண்டத் தகாது.
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
என்று மஹாகவி பாரதியார் இதனை விளக்குகிறார்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ஆகிரா

