Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



தகுதியுள்ள ஓர் ஆடவனும் அவனுக்கேற்ற ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கையில் கண்களின் வழியாகவே தம் காதல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்தல் மரபு. வாய் வார்த்தைகள் தேவையில்ல்லை, காதல் கடிதமும் தேவையில்லை தூது போகத் தோழியும் தேவையில்லை.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல

என்று வள்ளுவர் இதனை உணர்த்துகிறார்.

கம்பர் எழுதிய ராமாயண காவியத்தில் மிதிலா நகரின் வழியே குரு விஸ்வாமித்திரருடனும் தம்பி இலக்குவனுடனும் சென்ற இராமன் உப்பரிகையில் நின்ற சீதையைக் காண, அவ்வாறு நின்ற சீதையும் ராமனைக் காண,

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்

என்று அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கண்ட மாத்திரத்திலேயே தம்மையறியாமல் உள்ளத்தே எழுந்த காதல் உண்ர்வுகளைப் பரிமாறிக் கொண்ட விதத்தை விளக்குகிறார்.

ஆனால் தற்காலத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கையில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட போதிலும் பல காரணங்களால் மற்றவருக்குத் தன்மேல் உண்டான காதலை நிச்சயமாக உணர முடியாத நிலையில் குழம்புவதும் தவிப்பதும் சகஜம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/irumbu-thirai/nenjil-kudiyirukkum.php

திரைப்படம்: இரும்புத் திரை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எஸ்.வி. வெங்கடராமன்
பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants