- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
14 ஆண்டுகள் தூங்காமல் ஒருவனால் உயிர்வாழ முடியுமா எனும் கேள்வி எழுகிறது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தாய் காக் எனும் 64 வயதான விவசாயி ஒருவர் 1973ஆம் ஆண்டு முதல் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது வாழ்வதாக ஒரு செய்தி:
முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது
அது சரி. இவர்கள் ஆண்கள். கண்ணுறங்காத பெண் உலகில் உண்டோ:
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண்ணொன்று கண்டேன் யாரோ? நீ தான் எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை
துயிலாத பெண்ணொன்று கண்டேன் ஓஹோ எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
ஆகிரா

