Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



இராமாயணக் கதையில் இராவணனின் மகனான இந்திரஜித் தேவேந்திரனையே வென்றதனால் அப்பெயர் பெற்றான் எனவும், 14 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணுறங்காது தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவனே அவனை வதம் செய்த இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் கேள்விப் படுகிறோம். அதன் படியே இராமன் தந்தையின் ஆணைப்படி 14 ஆண்டுகள் வன வாசம் செய்கையில், கண்ணுறங்காது இராமனையும் சீதா பிராட்டியையும் கண்ணின் இமையெனக் காத்து வந்த இலக்குவன் கைகளால் இந்திரஜித் மடிந்ததாகக் கூறப் படுகிறது.

14 ஆண்டுகள் தூங்காமல் ஒருவனால் உயிர்வாழ முடியுமா எனும் கேள்வி எழுகிறது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தாய் காக் எனும் 64 வயதான விவசாயி ஒருவர் 1973ஆம் ஆண்டு முதல் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது வாழ்வதாக ஒரு செய்தி:

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது

அது சரி. இவர்கள் ஆண்கள். கண்ணுறங்காத பெண் உலகில் உண்டோ:

துயிலாத பெண்ணொன்று கண்டேன்

துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்

துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே

துயிலாத பெண்ணொன்று கண்டேன் யாரோ? நீ தான் எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை

துயிலாத பெண்ணொன்று கண்டேன் ஓஹோ எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants