Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



தீபாவளி என்றாலே குழந்தைகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. புத்தாடை அணிவதிலும், பட்சணங்கள் தின்பதிலும், பட்டாசு வெடிப்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் அவர்கள் அடையும் சுகம், அடடா! அது போன்றதொரு ஆனந்தம் தரும் பண்டிகை வேறெதுவும் இல்லை.

தீபாவளி குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் இன்பகரமான பண்டிகையே. நமது நாட்டில் அரசுத் துறைகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் பணி செய்யும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தீபாவளி வந்ததும் போனஸ் என்ற பெயரில் கணிசமான பணம் அவர்கள் பண்டிகை செலவைப் பூர்த்தி செய்ய வசதியாக வழங்கப் படுகிறது. அத்துடன் பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இனிப்புப் பொட்டலங்களும் வழங்கும் வழககம் உள்ளது.

இவை அனைத்துடனும் பணியிலிருந்து விடுமுறையும் அளிப்பதால் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கலந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் விதத்தில் தீபாவளிப் பண்டிகை அமைந்துள்ளது.

இத்தகைய கொண்டாட்டமான பண்டிகை தொடர்பான மிகப் பெரிய துயரத்தைத் தரும் செய்தி என்னவெனில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி செய்பவரில் அநேகர் சிறு குழந்தைகளாவர் என்பதே. பள்ளி சென்று, கல்வி பயின்று பிற குழந்தைகளைப் போல வாழ்வை சிறப்பாக வாழும் உரிமை மறுக்கப் பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி பிறந்து, குழந்தைத் தொழிலாளர்கள் நாட்டில் அறவே இல்லாத நிலை உருவாகி, அனைவருக்கும் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்து தரும் கடமை உணர்வு கொண்ட அரசும் சமுதாயமும் மலர வேண்டுமென இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்

படம்: திகம்பர சாமியார்
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரீஃப்
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன்
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1950

ஊசி பட்டாசே
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
லேடி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்

அடடா யானை வெடி இதனாலே சுடுவேனே உன்னைத் தாத்தா
அடடா யானை வெடி இதனாலே சுடுவேனே உன்னைத் தாத்தா
ஆமாமா நிஜமா சுட்டுப் போடாதே கோமாளித் தனமா கொளுத்திப் போடாதே
ஆமாமா நிஜமா சுட்டுப் புடாதே கோமாளித் தனமா கொளுத்திப் போடாதே

சீறிய பாம்பாய்
சீறிய பாம்பாய் மாறிடுமாம் தீ வெச்சாலே வெடி டமார்
சீறிய பாம்பாய் மாறிடுமாம் தீ வெச்சாலே வெடி டமார்
ஏரோபிளேனாப் போகுமாம் மேலே இது தானே பேஷ் பலே பலே
ஏரோபிளேனாப் போகுமாம் மேலே இது தானே பேஷ் பலே பலே

புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க தர வேணும் பணம் தாத்தா
புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க தர வேணும் பணம் தாத்தா
தாரேண்டி கண்ணே நாளைக்குக் காசு தாராளமாக பூவாணம் வாங்கு
தாரேண்டி கண்ணே நாளைக்குக் காசு தாராளமாக பூவாணம் வாங்கு

ஊசி பட்டாசே
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants