Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



செய்வன திருந்தச் செய் சேரிடம் அறிந்து சேர்

என்று மூதாட்டி ஔவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ள அறிவுரைகளை மனதில் கொண்டு நாம் எந்நாளும் நமது கடமைகளை முறையாக, நேர்மையான வழியில் முழுமையாகச் செய்தல் வேண்டும். நல்லவர்களுடன் மட்டுமே சேர்ந்து பழக வேண்டும். அவ்வாறு நடந்தால் வாழ்வில் நமக்கு இடையூறுகள் வாரா.

தற்கால உலகில் நல்லவர்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது, காரணம் பொருள் ஒன்றையே பெரிதாகக் கருதி, அப்பொருளையும் அதனால் கிடைத்திடும் சுகவாழ்வுக்கும் ஆசை மிகக்கொண்டு தன்மானத்தையும் நற்கொள்கைகளையும் இழக்கவும் தயங்காத கேடு கெட்ட சுபாவம் மனிதனைத் தொற்றிக் கொண்டதேயாகும்.

செலவுகளைக் குறைத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் துர்நோக்கத்துடன் ஆற்று நீர் அனைத்திலும் ஆலைக் கழிவுகளைக் கலந்து வெளியேற்றும் பல தொழிற்சாலைகள் லஞ்ச லாவண்யத்தின் மூலம் அரசின் அனுமதியுடன் தொடர்ந்து நடத்தப்படுவதால் ஆற்று நீருடன் நிலத்தடி நீரும் விஷமாகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட சீரழிவு ஏதெனில், மக்களுக்குக் குடி நீர் கிடைக்காமல் இன்று திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பங்குபெறுவோர் முதல் தினசரி ஒவ்வொரு வீட்டிலும் குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்கும் முரண்பாடான நிலை நிலவுகிறது. இத்தகைய நிலை தொடர்ந்தால் உலகில் மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்கள் எவையும் வாழ இயலாத கேடு விரைவில் ஏற்படும். அப்பொழுது இது போல் குறுக்கு வழியில் பணத்தைத் தேடியவர்களும் இந்த அவல நிலைக்குட்பட்டு மடிவது உறுதி.

நேர்மையற்ற வழியில் பணத்தைத் தேடுவோர் இன்றைய சமுதாயத்துக்கு விளைவிக்கும் கேடுகள் எண்ணற்றவை. "குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம்" என்ற கூற்றுப்படி இவர்கள் பிறரை அழிவுப்பாதையில் தள்ளுவதுடன் தானும் அவர்களுடன் சேர்ந்து மடிய நேரும் என்பதை அறியாது தவறு செய்கின்றனர். அத்தகைய சுயநலவாதிகளை நீக்கி, நாட்டை நல்லோர் பொறுப்பேற்று நடத்த வழி காண்பது மிகவும் அவசியம்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

படம்: மஹாதேவி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1957

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
ஓ... ஓ.. ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants