Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



ஒருவரது உடலைக் கொன்றால் அத்துடன் அவரது வாழ்வு முடிந்து விடும். இன்பம் துன்பம் இரண்டிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒருவரது உணர்சசிகளைக் கொன்றால் அவர் உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் மரண வேதனைக்கொப்பான துன்பத்தைத் தொடர்ந்து அனுபவித்து வாழ்வே நரகமாகி விடும்.

இதற்கு உதாரணம் அறியாச் சிறு வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் பருவமடையு முன்னரே அவளது கணவன் இறந்துவிட்டாலோ அல்லது காணாமற் போய்விட்டாலோ அப்பெண்ணை அவளது மரணம் வரையிலும் ஒரு கைம்பெண்ணாக வைத்து அவளுக்கு வெள்ளைச் சீலையைக் கட்டிவிட்டு அல்லது தலையை மொட்டையடித்துக் காவிப்புடவையைக் கட்டவைத்து உயிருடன் கொல்லும் கொடுமையான வழக்கம் ஆகும். இவ்வழக்கம் நமது நாட்டில் நமது முந்தைய தலைமுறை வரையிலும் நடைமுறையில் இருந்தது.

இதில் ஒரு மிகப்பெரிய அநியாயம் என்னவெனில் அவ்வாறு மணமான தம்பதியினருள் பெண் மடிந்தால் அந்த ஆண் வேறொரு பெண்ணைத் தடையின்றி மணக்கலாகும் எனும் ஒருதலைப்பட்சமான பெண்ணடிமைத் தனத்தை வளர்க்கும் கேடுகெட்ட வழக்கம் ஆகும். பெண்ணடிமை ஒழிந்து ஆணுக்கு நிகரான உரிமையைப் பெண்ணுக்கும் வழங்குவதன் அவசியத்தை மஹாகவி பாரதியார், பாவேந்தர் பாரதி தாசன், தந்தை பெரியார் முதலிய பெரியோர்கள் வலியுறுத்தியதன் விளைவாக இப்பெண்ணடிமை நிலை காலப்போக்கில் மாறி வருகிறது.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/bhagyalakshmi/maalai-pozhuthin.php

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants