Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



நமது நாட்டின் பல பகுதிகளை பண்டைக் காலத்திலிருந்து ஆண்ட மன்னர்கள் அனைவரும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவுமென்றே பல்வேறு இடங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேமித்தனர். அந்தக் காலததில் மக்களின் முக்கியமான தொழில்களாகப் பெரும்பாலும் விவசாயம், நெசவு, வாணிகம், கைவினைப் பொருட்கள் செய்தல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே விளங்கின. தற்காலம் போல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியவை மிகவும் குறைந்த அளவிலேயே செயல் படுத்தப்பட்டன.

அவ்வாறு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேடாக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். இத்தகைய போக்கை மாற்றி மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தைப் பரவலாக அமுல்படுத்த வேண்டும். இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தடி நீர் குன்றி உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

ஏரிகள் நிறைய வெட்டப்பட்டால் அவற்றின் கரையில் சோலைகளும் பூங்காக்களும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலங்களாக அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் வழி செய்யலாம். அது மட்டுமா? காதலர்கள் தங்களது வாழ்வை மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் அமைத்துக் கொள்ளவும் பூங்காற்று வீசும் ஏரிக் கரைகள் உதவும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/muthalali/erikaraiyin-mele.php

படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்

ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants