- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-002/panjali/oru-murai-parthale-pothum.php
திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959
ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்
ஒரு முறை பார்த்தாலே போதும்
கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?
ஒரு முறை பார்த்தாலே போதும்
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்
ஆகிரா

