Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



கழுதை குட்டியாக இருக்கையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அடர்ந்த ரோமத்துடன் திகழும். ஓடுகையில் ஒரு குதிரைக் குட்டி ஓடுவதைப் போல் இருக்கும். அதே கழுதை வயது ஏற ஏற அதன் பின்னங்கால்கள் இரண்டும் கோணிக்கொண்டு, ரோமம் உதிர்ந்து, உடலெங்கும் மண் படிந்து பார்க்க சகிக்காத அளவுக்கு அருவெறுப்பான தோற்றத்தை அடையும். இதனாலேயே "வர வ்ர மாமியார் கழுதைப் போலானாளாம்" என்று தனது மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார்களைக் கழுதைக்கு உதாரணமாகக் கூறுவதுண்டு.

குழந்தைகளாக இருந்தபோது நமது உள்ளங்களில் பெரிதும் குதூகலமே குடியிருந்தது. அவ்வப்போது பிற குழந்தைகளுடனும், பெற்றோருடனும், பிற வயதில் மூத்த நண்பர்களுடன் ஏதேனும் சில காரணங்களினால் ஏற்படும் மன வருத்தங்கள் அனைத்தையும் அக்காரணங்கள் நீங்கியதும் நொடிப்பொழுதில் மறந்து விட்டு அனைவருடனும் மனம் விட்டுக் கலந்து பேசி, விளையாடி மகிழும் மனம் அப்போது நமக்கு இருந்தது.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வயது வந்த பின்னர் கழுதையைப் போலவே நம் மனதில் கள்ளமும் கபடமும் குடிபுகுந்து போலி கௌரவம் கொண்டு, பொறுமை இழந்து அவதிப் படுகிறோம். பிறருடன் அற்பக் காரணங்களுக்காகவும் காரணமே இல்லாமலும் கோபம் கொண்டு அவரது மகிழ்ச்சியைக் குலைப்பதோடல்லாமல் நமது உள்ளங்களையும் நாமே புண்படுத்திக் கொள்கிறோம். நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம்: குழந்தையும் தெய்வமும்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants