Create your own banner at mybannermaker.com!
பல்சுவை வலை - share contents such as stories, articles, poems, news, photographs, audio, video, drawings and paintings, cartoons and the like on all subjects including Religion, Cinema, Politics, Social and Economic issues, art, artists, Women's welfare, Healthcare etc. in English and Tamil - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், வீடியோ, ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட படைப்புகள் மதம், திரைப்படம், அரசியல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தினம் ஒரு பாடல்
Daily a Tamil Song to enlighten the mind and refresh life



குலப்பெண்களிடம் இயல்பாகவே நிறைந்திருக்கும் குணம் நாணம். நாணமே ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. நாணமில்லாப் பெண்களிடம் முழுமையான அழகிருக்காது. இத்தகைய நாணமுள்ள பெண்கள் அதிகம் பேச மாட்டார்கள். யாருடனும் அளவோடு பேசிப் பழகுவது இவர்களது சுபாவம் ஆகும். இவர்கள் காதல் வயப்பட்டு விட்டால் இந்த அளவான பேச்சும் மிகவும் குறைந்து விடும். இத்தகைய பெண்ணொருத்தி தன் மனதைக் கொள்ளை கொண்ட காதலனைச் சந்தித்தாலோ பேச்சு முற்றிலும் நின்றுவிடும். ஆயினும் தன் மனதில் இருக்கும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தனது கண்கள் வழியாகவே தன் காதலனுக்கு உணர்த்தும் சக்தியும் பெற்றிடுவாள் அப்பெண். அவளுடன் உறாவாடுகையில் அவளது காதலனுக்கும் அவளது விழிகள் பேசும் மொழி புரிந்து தன் பார்வையாலேயே தன் மனத்தின் எண்ணங்களை அவளுக்கு உணர்த்தும் சக்தி கிடைத்துவிடும் போலும். அதனாலேயே திருவள்ளுவர்,

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல

என்று எழுதி வைத்தாரோ?

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

திரைப்படம்: கொடிமலர்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1966

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் - வர வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் - தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும்
அங்கம் தழுவும் வண்னத் தங்க நகை போல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்...

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்?
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்?
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்...

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

ஆகிரா

Mazhalaigal.com








Designed and maintained by AKR Consultants