- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
அவ்வாறு காதல் உணர்வுகளாலும் நாணத்தாலும் அலைமோதும் மனத்தினளாய் அவதியுறும் பெண்ணொருத்திக்கு அவளது காதலன் அவளது தவிப்பைப் போக்க சொல்லும் ஆலோசனைகள் என்ன?
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது
திரைப்படம்: சங்கிலித் தேவன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1960
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி
தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது
ஆகிரா

